பயணிகளுடன் ஆற்றில் விழுந்த பேருந்து...8 பேருக்கு நேர்ந்த சோகம் - நேபாளில் அதிர்ச்சி சம்பவம்

x

நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் காத்மாண்டில் இருந்து பொக்காரா நகருக்கு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, தாடிங் மாவட்டத்தில், திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். பல பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். நேபாளத்தில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள், மோசமான சாலை பராரமரிப்பு மற்றும் வாகன பராமரிப்பு காரணங்களால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்