இஸ்ரேலில் உக்கிரமடையும் போர்... ஏர் இந்தியா சொன்ன அதிர்ச்சி தகவல்

x

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்தும் தாக்குதல் எதிரொலியாக, இஸ்ரேலுக்கான விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் எவிவ் நகரத்திற்கு புறப்பட இருந்த AI-139 விமானமும், அதேபோல், டெல் எவிவ் நகரத்திலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த AI-140 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பயணிகள் மற்றும் தங்கள் பணியாளரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா கூறியுள்ளது. மேலும், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்