ஈரான் குண்டுவெடிப்பு... உண்மையை உடைத்த அமெரிக்கா

x

ஈரான் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானில், அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி காசிம் சுலைமானின் நினைவு தின நிகழ்ச்சியில் அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதனால், அவர்களது குடும்பங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்