செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பிரமாண்ட பொங்கல் விழா நடைபெற்ற விழா

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பிரமாண்ட பொங்கல் விழா நடைபெற்ற விழா
Published on

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் பொங்கல் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. பொங்கலை வரவேற்கும் விதமாக 1008 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்து,1,500 பரத நாட்டிய கலைஞர்கள் மற்றும் 500 கோலங்களுடன் திருகோணமலையில் பொங்கல் விழா விமரிசையாக நடந்தது. இதில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டியை செந்தில் தொண்டமான் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com