"நான் குற்றம் அற்றவன்"

x

2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ட்ரம்ப் மீது வழக்கு தொடுக்க நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது. வாஷிங்டனின் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தான் இந்த வழக்கில் குற்றமற்றவர் என ட்ரம்ப் தெரிவித்தார். இதையடுத்து அடுத்த விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து வெளியே வந்த ட்ரம்ப், "இது அமெரிக்காவுக்கு மிகவும் சோகமான நாள்" என்றும், "அரசியல் எதிரிகளால் துன்புறுத்தப்படுவதாகவும்" தெரிவித்த ட்ரம்ப், "இது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடக்கக் கூடாது" என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்