ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு - கோர்ட்டுக்கு வெளியே பதற வைக்கும் சம்பவம்

x

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில், நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றம், டிரம்பிற்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, நீதிமன்றத்துக்கு வெளியே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, ஊழலை அம்பலப்படுத்துங்கள் என்று அந்த நபர் உரக்க கூறியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்