இங்கிலாந்து சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர்...இந்தியில் கிடைத்த ராணுவ மரியாதை

x

இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்சை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்... பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... முன்னதாக லண்டனில் பிரிட்டிஷ் ராணுவத்தின் 7ம் எண் நிறுவன கோல்ட்ஸ்ட்ரீம் காவலர்கள் மற்றும் அயர்லாந்து காவலர்களின் இசைக்குழுவினர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு சிறப்பு மரியாதையுடன் முறைப்படியான வரவேற்பு அளித்தனர்... அவரை கவுரவிக்கும் வகையில், இந்தியில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது... 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரிட்டன் செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்