ஈரானுக்கு குறி...போருக்கு தயாராகும் அமெரிக்கா..?பதற்றத்தில் மத்திய கிழக்கு

x

ஈரான் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜோர்டானில் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஈரான் ஆதரவு குழுக்களே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறி வருகிறது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபரின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஓரிரு தினங்களில் தாக்குதலை தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்