ஹவாய்-வை தொடர்ந்து கனடாவில் மீண்டும் தீவிரமடைந்த காட்டு தீ..

x

ஹவாய் தீவை தொடர்ந்து கனடா நாட்டில் மீண்டும் தீவிரமடைந்த காட்டு தீயால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா, கெலோவ்னா உள்ளிட்ட கனடாவின் பல பகுதிகளில் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வான்கூவர் நகரிலிருந்து 270 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓகோனோகான் ஆற்றையொட்டியுள்ள மலைப்பகுதிகளில் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. காட்டு தீ காரணமாக அப்பகுதியில் வசித்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப் பட்டுள்ளதாகவும், மோசமான காட்டு தீயை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளதாகவும் கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்