நடுக்கடலில் தனியாக மிதந்த படகு.. உள்ளே கிடந்த 20 மனித உடல்கள் - அழுகி சிதைந்து இருந்த கோர காட்சிகள்

x

#brazil

நடுக்கடலில் தனியாக மிதந்த படகு.. உள்ளே கிடந்த 20 மனித உடல்கள் - அழுகி சிதைந்து இருந்த கோர காட்சிகள்

பிரேசில் நாட்டின் பாரா மாகாணம் அருகே கடலில் 20-க்கும் மேற்பட்ட அழுகிய உடல்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட படகு குறித்த விசாரணையை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். பாரா மாநிலத்தின் வடகிழக்கே பிராகன்காவில் உள்ள அஜுருட்யூவா கடற்கரை பகுதியில் மீனவர்களால் மர்ம படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில், அழுகி சிதைந்த நிலையில் மனித உடல்கள் இருந்துள்ளன. 20-க்கும் மேற்பட்ட உடல்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது. படகு, கரைக்கு கொண்டு வரப்பட்டு, போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் விசாரணையை தொடங்கியுள்ளனர். படகில் இருந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், எத்தனை பேர் என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படகில் இருந்தவர்கள் ஹைதி நாட்டைச் சேர்ந்த அகதிகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்