புகழ்பெற்ற தீவில் பயங்கரம் - 6 பேர் பலி

x

அமெரிக்காவின் ஹவாயின் மெளய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான ஹவாயின் மெளய் தீவில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீயானது குடியிருப்பு பகுதிகளுக்கு பரவ தொடங்கியுள்ள நிலையில், இதில் 6 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்