மண்ணோடு மண்ணாக புதைந்த 40 பேர்.. தோண்ட தோண்ட உடல்கள்

x

மியான்மர் நாட்டில் ஜேட் கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கச்சின் மாகாணத்தில் ஹிபாகண்ட் பகுதியில் உள்ள சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதனையடுத்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட, குழுவினர், 22 பே​ரின் உடல்களை மீட்டுள்ளனர். எஞ்சியவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்