கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை - மண்ணெண்ணெய்க்காக தவமிருக்கும் மக்கள்!

மண்ணெண்ணெய் கேட்டு கொழும்பின் பிரதான சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
x
கடும் பொருளாதர நெருக்கடியில் இலங்கை தவித்து வரும் நிலையில், மண்ணெண்ணெய்க்காக இலங்கை மக்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இந்தநிலையில் கொழும்பின் ஒருகொடவத்த பகுதியில் நீண்ட நேரம் காத்திருந்தும் மண்ணெண்ணெய் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்த முயன்றும் மறியல் தொடர்ந்ததால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்