பாலஸ்தீனியரை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை - கொல்லப்பட்ட பாலஸ்தீனியரின் இறுதி ஊர்வலம்
இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியரை இஸ்ரேல் படைகள் சுட்டுக் கொன்றன. இஸ்ரேல் படைகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் சுட்டதாக இஸ்ரேல் தரப்பு விளக்கம் அளித்தது. ஆனால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டாரா என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில், இறந்த நபரின் இறுதி ஊர்வலத்தில் கொடிகளுடன் ஊர்வலம் வந்த ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
Next Story