6வது மாடியில் இருந்து குதித்து , பிரபல பாடகி தற்கொலை

ஜப்பான் நாட்டின் பிரபல் பாடகி சயாகா கன்டா 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
x
ஜப்பான் நாட்டின் பிரபல் பாடகி சயாகா கன்டா 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகர் மாட்சுடா சீகோவின் மகளான சயாகா கன்டா கடந்த சனிக்கிழமை அன்று சப்போரோ திரையரங்கில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அதே சமயத்தில் அவர் தான் தங்கியிருந்த ஓட்டலின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து நீச்சல் குளத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், பிரபல பாடகி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்