வடகொரியாவில் சிரிக்க தடை...

வடகொரியாவில் சிரிக்க தடை...
x
வடகொரியாவில் சிரிக்க தடை...

வட கொரியாவில் உள்ள பொதுமக்கள் அடுத்த 10 நாட்களுக்கு சிரிக்கக் கூடாது என அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 17ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சில கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு வட கொரியாவில் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கேளிக்கைகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. மூன்றாவது தலைமுறையாக வட கொரியாவை கிம் குடும்பம் ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்