21 அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்து - பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

நைஜீரியாவில் 21 அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
21 அடுக்குமாடி கட்டடம் இடிந்த விபத்து - பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
x
லகோஸ் மாகாணம் இயோகி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 21 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கட்டட பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உள்ளே சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்