வேன் மீது மோதி தடம்புரண்ட ரயில் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
ஆஸ்திரேலியாவில் ரயில் தடம்புரண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.
கெம்ப்லா கிரேஞ்ச் என்ற பகுதியில், ரயில்வே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது பயணிகள் ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ரயில் ஓட்டுனர் மற்றும் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், வேனை ரயில் தண்டவாளத்தில் நிறுத்தி விட்டு சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story