பெய்ரூட் வன்முறை - 7 பேர் பலி

பெய்ரூட்டில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு கிறித்தவ லெபனான் படைகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதற்கு அக்கட்சியின் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெய்ரூட் வன்முறை - 7 பேர் பலி
x
கடந்த ஆண்டு லெபனான் துறைமுகத்தில் நடைபெற்ற வெடிகுண்டு விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி, நீதிபதியை நீக்க வேண்டும் என்று ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு கிறித்தவ லெபனான் படைகளே காரணம் என்று ஹெஸ்பொல்லா குற்றம் சாட்டியது. இதற்கு, கிறித்தவ லெபனான் படைகள் கட்சித் தலைவர் சமீர் கியகியா மறுப்பு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்