வில், அம்பு மூலம் சரமாரி தாக்குதல் - 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

நார்வே நாட்டில் மர்மநபர் ஒருவர் வில் அம்புகளை கொண்டு தாக்குதல் நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வில், அம்பு மூலம் சரமாரி தாக்குதல் - 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
x
நார்வே தலைநகர் ஓஸ்லோ அருகே உள்ள காங்ஸ்பெர்க் நகரில், மர்ம நபர் ஒருவர் வில் அம்பு மூலம் பொதுமக்களை நோக்கி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நுழைந்த அந்த நபர், பொதுமக்களை நோக்கி அம்புகளை எய்தியுள்ளார்.

மர்ம நபரின் கண்மூடித்தனமான தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், 2 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வில் அம்பு மூலம் விசித்தர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், இதுதொடர்பாக டென்மார்கைச் சேர்ந்த ஒருவரை நார்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் மிக கொடுமையானது என அந்நாட்டின் இடைக்கால பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார். 

உலகின் அமைதியான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் நார்வேவில், கடந்த 2011-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டை மட்டுமின்றி உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த தாக்குதலுக்கு பிறகு, வில் அம்பு மூலம் நடத்தப்பட்ட விசித்திர தாக்குதலில் 5 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்