வெள்ளத்தின் நடுவே இயங்கும் உணவகம்: வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவம்
தாய்லாந்தில் வெள்ளத்திற்கு நடுவே இயங்கி வரும் உணவகத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
அந்நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், சோ ஃப்ரயா ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள உணவக உரிமையாளர் வெள்ளத்தில் புதுமையை நிகழ்த்தி, வெள்ள நீருக்கு மத்தியில் வாடிக்கையாளர்களை அமர்த்தி உணவு பரிமாறி அசத்தியுள்ளார். இது புது அனுபவத்தைத் தருவதாக அக்கடைக்கு வருவோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Next Story