சிறார்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி - விரைவில் ஒப்புதல் வழங்க வாய்ப்பு

சிறார்களுக்கு செலுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறார்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி - விரைவில் ஒப்புதல் வழங்க வாய்ப்பு
x
2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு செலுத்துவதற்கான, கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் மீது முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் தரவுகள் மற்றும் முடிவுகளை, இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இதை தொடர்ந்து விரைவில் பரிசோதனையின் முடிவுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு, தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்