இந்த வருட இறுதிக்குள் 10கோடி தடுப்பூசிகள் - சீன அதிபர் தகவல்

இந்த வருட இறுதிக்குள் 10கோடி தடுப்பூசிகள் - சீன அதிபர் தகவல்
இந்த வருட இறுதிக்குள் 10கோடி தடுப்பூசிகள் - சீன அதிபர் தகவல்
x
இந்த வருட இறுதிக்குள் 10கோடி தடுப்பூசிகள் - சீன அதிபர் தகவல் 

இந்த வருட இறுதிக்குள் கிட்டத்தட்ட 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை, வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழங்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் சி சின்பிங், சீனா உலக நாடுகளின் தேவைக்காக, தடுப்பூசி மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்ப உதவிகளை செய்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இது வரையில், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த வருட இறுதிக்குள் 20 கோடி தடுப்பூசிகளை சீனா கொடுக்க முயலும் என்றும், அதில் 10 கோடி தடுப்பூசிகள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்