"ஆப்கான் பெண்களுக்கு என்ன நடக்குமோ?" - ஜக்கி வாசுதேவ் கருத்து
"ஆப்கான் பெண்களுக்கு என்ன நடக்குமோ?" - ஜக்கி வாசுதேவ் கருத்து
"ஆப்கான் பெண்களுக்கு என்ன நடக்குமோ?" - ஜக்கி வாசுதேவ் கருத்து
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு என்ன நடக்குமோ என்று நினைப்பது கூட இதயத்தை உடைக்கிறது என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆப்கான் விவகாரத்தில் உலகம் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். உலகின் முக்கிய சக்திகள் துன்பங்களை குறைக்க தங்களது செல்வாக்கை பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
Next Story