மாணவர்களுக்கு வில்லனா செல்போன்? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
நாட்டில் கற்றலைவிட நண்பர்களுடன் உரையாடுவதற்கே மாணவர்கள் அதிகம் செல்போனை பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டில் கற்றலைவிட நண்பர்களுடன் உரையாடுவதற்கே மாணவர்கள் அதிகம் செல்போனை பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.ஆன்லைன் கல்வி மற்றும் மாணவர்களின் செல்போன் பயன்பாடு குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆய்வு நடத்தியது. 6 மாநிலங்களில் 60 பள்ளிகளை தேர்ந்தெடுத்து 3,491 மாணவர்கள், 1,534 பெற்றோர்கள், 786 ஆசிரியர்கள் என மொத்தம் 5,811 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.இதில் அதிர்ச்சி தரும் விஷயமாக, 10 புள்ளி1 சதவிகித மாணவர்கள் மட்டுமே கற்றலுக்காக செல்போன் பயன்படுத்துவதும், 52 புள்ளி 9 சதவிகிதம் பேர் நண்பர்களுடன் சேட்டிங் செய்ய செல்போனை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.10 வயது குழந்தைகளில் 37 புள்ளி 8 சதவிகிதம் பேர் பேஸ்புக் பயன்படுத்துவதும், 24 புள்ளி 3 சதவிகிதம் பேர் இண்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.8முதல் 18 வயதுடைய மாணவர்களில் 30 சதவிகிதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்துள்ளதும், அதேபோல தினசரி செல்போன் பயன்பாடு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
Next Story