இலங்கை கடலில் கப்பல் எரிந்த சம்பவம்... 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு

இலங்கை கடலில் கப்பல் எரிந்த சம்பவம்... 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு
இலங்கை கடலில் கப்பல் எரிந்த சம்பவம்... 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு
x
இலங்கை கடலில் கப்பல் எரிந்த சம்பவம்... 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு 

இலங்கை கொழும்பு கடற்பகுதியில் கப்பல் எரிந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில், 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு தலைமை வழக்கறிஞர் சஞ்சய் ராஜரத்னம் கூறி உள்ளார். 176 ஆமைகள், 4 திமிங்கலங்கள் மற்றும் 20 டால்பின்கள் இந்த விபத்தால் உயிரிழந்ததாகவும், பல கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கொழும்பு நீதிமன்றத்தில் அவர் தெரிவித்து உள்ளார். கொழும்பு கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற சரக்கு கப்பல், சமீபத்தில் எரிந்து மூழ்கியது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்