மாலி நாட்டு அதிபர், பிரதமர் கைது - அந்நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கை
மாலி நாட்டில் அதிபர் மற்றும் பிரதமரை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக கைது செய்துள்ளது.
மாலி நாட்டு அதிபர், பிரதமர் கைது - அந்நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கை
மாலி நாட்டில் அதிபர் மற்றும் பிரதமரை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக கைது செய்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது. இதையடுத்து இடைக்கால அதிபராக பா டா(BAH DAW) இருந்து வருகிறார். இந்நிலையில், அந்நாட்டின் அமைச்சரவை நேற்று சீரமைக்கப்பட்டது. இதில், ராணுவ அமைப்பில் இருந்த உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ராணுவ அதிகாரிகள் அதிபர் மற்றும் பிரதமரை கைது செய்தனர். இதனால், அந்நாட்டில் பதற்ற நிலை காணப்படுகிறது.
Next Story