நிலக்கரி சுரங்கத்தில் புகுந்த வெள்ளம் : சிக்கிக் கொண்ட 21 தொழிலாளர்கள் -நீரை வெளியேற்றும் பணி தீவிரம்

சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட 21 தொழிலாளர்களை மீட்க, தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கத்தில் புகுந்த வெள்ளம் : சிக்கிக் கொண்ட 21 தொழிலாளர்கள் -நீரை வெளியேற்றும் பணி தீவிரம்
x
சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட 21 தொழிலாளர்களை மீட்க, தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் ஹுட்டுபி நகரில் இயங்கிவரும் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெள்ள நீர் புகுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 21 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராட்சத இயந்திரங்கள் மூலம் 1 மணி நேரத்திற்கு 725 கன அடி நீரை வெளியேற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் இறங்கியுள்ளனர். பிறகு இதை இரட்டிப்பாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்