18 வயது நிரம்பினால் கட்டாய ராணுவ பயிற்சி - இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர தகவல்
இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிம் பேசிய அவர், இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சிகளை வழங்கும் இந்த யோசனையை விரைவில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக கூறினார். இலங்கையின் நன்மையை கருத்தில் கொண்டே, இந்த யோசனை முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Next Story