அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் - குழுவிற்கு தலைமை தாங்கிய இந்திய பெண்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைமை அதிகாரி ஒரு இந்திய பெண் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் - குழுவிற்கு தலைமை தாங்கிய இந்திய பெண்
x
அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகை மற்றும் சர்ச்சை கருத்து வெளியீடு உள்ளிட்ட காரணங்களை அடுத்து ட்விட்டர் நிறுவனம் அதிபர் டிரம்ப்பின் கணக்கை முழுமையாக முடக்கியது. இந்த நிலையில் அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் விஜயா கடே என்றும் அவர் ஒரு இந்திய பெண் என தகவல் தெரியவந்து உள்ளது. இந்தியாவில் பிறந்த விஜயா கடே தனது 3-வது வயதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்து உள்ளார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை பட்டமும் நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்ட படிப்பும் முடித்து பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்