பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா - ஒரே நாளில் சுமார் 33 ஆயிரம் பேர் பாதிப்பு
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் அங்கு நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 364 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அங்கு நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 364 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒரே நாளில் 215 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம், அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 616 ஆக அதிகரித்து உள்ளது. இதனிடையே, லண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.
Next Story