ஓஹியோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் பிரச்சாரம்

ஓஹியோ மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸ் நேற்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஓஹியோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ்  பிரச்சாரம்
x
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளெவ்லேண்ட் பகுதியில் ஜனநாயக கட்சியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தம்மை பெண் சோசலிஸ்ட் என விமர்சித்த டிரம்பை கடுமையாக சாடினார். மக்களால் வாங்கும் திறன் கொண்டு சுகாதாரத் திட்டங்களில் இருந்த அதிபர் டிரம்ப் நழுவ பார்ப்பதாகவும், ஜனநாயக கட்சி அந்த திட்டத்தை விரிவுப்படுத்த பார்ப்பதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.  கிளீவ்லேண்ட் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள யூக்லிட் அவென்யூவில் உள்ள சான்சிபார் என்ற உணவகத்திற்கு சென்ற கமலா ஹாரிசை அவரது கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். 
கொரோனா காலத்தில் வியாபார சிக்கலை எவ்வாறு எதிர்க்கொண்டிர்கள் என அந்த உணவக உரிமையாளரான ஜா​னி ஹட்டனிடம் கேட்டறிந்தார் கமலா ஹாரிஸ். கேட்ஃபிஷ், கீரைகள் மற்றும் ஓக்ரா உள்ளிட்ட உணவுப் பைகளை பிரச்சாரத்துக்கு அனுப்பி வைத்தார் உணவக உரிமையாளர் ஜானி ஹட்டன்.

அமெரிக்க மாகாண தேர்தல் - ஓகியோவில் வாக்குபதிவு

அமெரிக்க தேர்தலில் ஓகியோ, நியூயார்க் மாகாண மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை அளித்தனர். வரும் நவம்பர் 3-ந்தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக மாகாண தேர்தல்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் ஓகியோ மாகாணம் கிளிவ் லேண்டில் நடந்த தேர்தலில் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல் நியூயார்க்கில் நடந்த வாக்குபதிவிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கடல் அலை போல் திரண்டு வந்து தங்கள் வாக்குகளை அளித்தனர். இதுவரை 50 மில்லியன் அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகளை அளித்துள்ள நிலையில், இது ஒரு நூற்றாண்டின் அதிகபட்ச வாக்கு பதிவு என்ற சாதனையாகவும் கருதப்படுகிறது. 

காபூலில் பயங்கர வெடிவிபத்து - 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த வெடி குண்டு தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக இறந்தனர். காபூல் முக்கிய சாலையில் நடந்த  குண்டுவெடிப்புக்கு இதுவரை 18 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகளே குண்டு வெடிப்புக்கு காரணம் என அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இதுவரை தலிபான் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - மக்கள் மீது துப்பாக்கி சூடு

நைஜீரியாவில் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நைஜீரிய அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லாகூசில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சுங்க சாவடி கண்ணாடி உடைக்கப்பட்டன. இதையடுத்து நடந்த துப்பாக்கி சுட்டில் பலர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் திவீர சிகிச்சையில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்