தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா: துபாயில் உற்சாக கொண்டாட்டம்

துபாயில் தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா: துபாயில் உற்சாக கொண்டாட்டம்
x
சபாப் அல் அக்லி கிளப்பில் பொங்கல் திருநாளையொட்டி கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இறுதியில் இந்த போட்டியில் கேரளாவைச் சேர்ந்த இ.எம்.எஸ். பல்லம் அணி, துபாய் பிடிகே அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. 

கபடி போட்டிக்கான சிறப்பு விருந்தினராக இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனும், அர்ஜூனா விருது பெற்றவருமான ராஜரத்தினம் கலந்து கொண்டார்.  சாலிட்ராக் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிறிஸ்டோபர், ஈரோடெக் கேஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் பிரபாகர், தமிழ் எப்.எம். வானொலி மேலாண்மை இயக்குநர் ராம் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்