யாழ்ப்பாணத்தில் 8 கிலோ ஹெராயின் தீயிட்டு அழிப்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ ஹெராயின் போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டு உள்ளது.
யாழ்ப்பாணத்தில் 8 கிலோ ஹெராயின் தீயிட்டு அழிப்பு
x
யாழ்ப்பாணத்தில் சுமார் 8 கோடி ரூபாய்  மதிப்புள்ள 8 கிலோ  ஹெராயின் போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டு உள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம சங்கரின் உத்தரவு அடுத்து, போலீசார் போதைப் பொருளை தீயிட்டு அழித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 6 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ 128 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்தனர். இந்த வழக்கில்  6 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி, போதை பொருட்களை தீயிலிட்டு அழிக்க உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்