புல்லட் ரயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை : ஜப்பானில் நடந்த ருசிகர சம்பவம்...

ஜப்பானில், இதுவரை கடும் சீற்றங்களுக்கு கூட நிறுத்தப்படாத அதிவேக புல்லட் ரயில் சேவை, ஒற்றை நத்தையால் நிறுத்தப்பட்ட ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது
புல்லட் ரயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை : ஜப்பானில் நடந்த ருசிகர சம்பவம்...
x
ஜப்பானில், இதுவரை கடும் சீற்றங்களுக்கு கூட நிறுத்தப்படாத  அதிவேக புல்லட் ரயில் சேவை, ஒற்றை நத்தையால் நிறுத்தப்பட்ட ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 30ஆம் தேதி ஜப்பான் தெற்கு பகுதியில் உள்ள புல்லட் வழித்தடத்தில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக 25 புல்லட் ரயில்களின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து ஆராய்ந்த போது, ரயில் பாதைக்கு தொடர்புடைய எலக்ட்ரானிக் கருவியில் உயிரிழந்த நிலையில் நத்தை ஒன்று இருந்துள்ளது. இறந்த இந்த நத்தையால் தான் மின்சாரம் தடைபட்டு, ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பான் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்