மோடியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு

இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
மோடியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு
x
இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். அதிபர் சிறிசேனாவுடன், இருதரப்பு உறவு குறித்து மோடி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன் தலைமையிலான நிர்வாகிகள், மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது விடுதலைப் புலிகள் வீழ்ந்த பின்னர், வெளியேற்றப்பட்ட தமிழர்களை, மீண்டும் அவர்களது இருப்பிடத்திலேயே குடியேற்றுவது உள்ளிட்ட இலங்கை தமிழர் நலன் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இலங்கை தமிழர் மேம்பாடு குறித்து , ஆலோசிக்க டெல்லி வருமாறு,  தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்