இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஆஸ்திரேலிய அமைச்சர் பீட்டர் டட்டன் மலரஞ்சலி
இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்குள்ளான தேவாலயத்தை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் பார்வையிட்டார்.
இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்குள்ளான, தேவாலயத்தை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், பார்வையிட்டார். 2 நாள் சுற்றுப்பயணமாக, இலங்கை வந்த உள்துறை அமைச்சர், குண்டு வெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்திற்குள் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, ஆஸ்திரேலிய அமைச்சர் மலரஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அமைச்சர் பீட்டர் டட்டன், இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த, முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றார்.
Next Story