இலங்கை பிரதமர் ரணில் - ராஜபக்சே சந்திப்பு
பொருளாதார நெருக்கடி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எதிர்கட்சி தலைவர் ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினார்.
இலங்கை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எதிர்கட்சி தலைவர் ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினார். கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள வர்த்தக துறையினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர் .மேலும் குண்டுவெடிப்பை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
Next Story