தீவிரவாத தாக்குதல் குறித்த உண்மை கண்டறியவில்லை - சுரேஸ் பிரேமசந்திரன்
இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறியாமல் காழ்ப்புணர்ச்சி அரசியலில் அரசும் எதிர்கட்சியும் ஈடுபடுவதாக சுரேஸ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறியாமல், காழ்ப்புணர்ச்சி அரசியலில் அரசும், எதிர்கட்சியும் ஈடுபடுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதுகாப்பு விவகாரத்தில் அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தை வைத்து இலங்கை அரசும், எதிர் கட்சியும் அரசியல் செய்வதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் குற்றஞ்சாட்டினார்.
Next Story