ஏப்ரல் மாதத்தில் டிரம்ப் - மூன் சந்திப்பு : அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இடையே சந்திப்பு நடைபெற இருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் டிரம்ப் - மூன் சந்திப்பு :  அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை
x
ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இடையே சந்திப்பு நடைபெற இருக்கிறது.இந்த சந்திப்பு, அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில், வருகின்ற ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதாக,தென் கொரிய அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சந்திப்பின்போது கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த பேச்சுவார்த்தை முக்கிய இடம் பெறவுள்ளது.டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் இடையேயான இரண்டாம் கட்ட சந்திப்பு தோல்வியில் முடிவடைந்த நிலையில், அணு ஆயுத ஒழிப்பு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்