இலங்கை அதிபர் சிறிசேனவை சந்தித்த சம்பந்தன்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
இலங்கை அதிபர் சிறிசேனவை சந்தித்த சம்பந்தன்...
x
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் அதிபர்  மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர். சிறைகளில் உள்ள  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை  குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது .. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன் , நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன்னும் இரண்டு வாரங்களில் தேசிய பாதுகாப்பு சபை மற்றும் சட்டமா அதிபருடன்  பேசி தீர்வை தருவதாக அதிபர் சிறிசேன தெரிவித்த தாக கூறினார் ஆட்சியிலிருக்கும் அரசுக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் , தாம் மட்டுமே பதவியில் இருப்பதாகவும் , 24 மணிநேரத்துக்குள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணவுள்ளதாகவும் சிறிசேன தெரிவித்த தாக சம்பந்தன் கூறியுள்ளார் . 

Next Story

மேலும் செய்திகள்