அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு தினம் இன்று...

அமெரிக்காவில் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் 17 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு தினம் இன்று...
x
* 2001ஆம் ஆண்டு இதே நாளில், 4 விமானங்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகள், அவற்றில் இரண்டை, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது மோத செய்தனர். 

* தொடர்ந்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். 

* இந்த பயங்கரவாத செயலுக்கு காரணம் அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் என உறுதி செய்த அமெரிக்கா,  பயங்கரவாதிகளை அழிக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

* 10 ஆண்டுகள் தீவிர சோதனைக்கு பிறகு, ஒசாமா பின்லேடனை  அமெரிக்க ராணுவம் 2011 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது.  அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்