வட கொரியா - தென் கொரியா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே உயர்மட்ட பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது.
வட கொரியா - தென் கொரியா இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது
x
 நீண்ட காலமாக இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜோவே இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில், இரு நாட்டு உறவுகள் மற்றும் நட்பு தொடர்பான பேச்சு வார்த்தை சியோலில் இன்று நடைபெற்றது. 

தென்கொரிய அமைச்சர் சோ மியோங் மற்றும் வட கொரிய அமைச்சர் ரி சோன் குவான் ஆகியோர் தலைமையிலான இரு நாட்டு  அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர். அப்போது, இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் 3வது கட்டமாக அடுத்த மாதம் சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்