தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் நலம் - வரும் வியாழக்கிழமை 'டிஸ்சார்ஜ்'
தாய்லாந்தில் கடந்த ஜூலை 10 ஆம் தேதியன்று குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் 12 பேர் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனைவரும் சியாங்ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாய்லாந்தில் கடந்த ஜூலை 10 ஆம் தேதியன்று குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் 12 பேர் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனைவரும் சியாங்ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வருகிற வியாழக்கிழமையன்று, வீடு திரும்புவார்கள் என தாய்லாந்து சுகாதார அமைச்சர் பியாஸ்கோல் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மீட்கப்பட்ட சிறுவர்கள், மருத்துவமனை படுக்கையில் அமர்ந்து ஓவியங்கள் வரைவது போன்ற காட்சிகளை வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசிய சிறுவர்கள், தங்களை மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், தாங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், பிரைட் ரைஸ் சாப்பிட ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Next Story