நடன மங்கையை கைது செய்தது ஈரான் அரசு
நடன வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் நடவடிக்கை
ஈரானைச் சேர்ந்த நடன மங்கை மாதேக் ஹோஜாப்ரி என்பவரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. சமூக வலைதளங்களில் தான் நடனமாடும் வீடியோ காட்சிகளை தொடர்ந்து அவர் வெளியிட்டு வந்தார். இதையடுத்து, அவரை இன்ஸ்ட்ராகிராம் சமூக வலைதள பக்கத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டு மதச்சட்டத்துக்கு எதிராக மாதேக் செயல்படுவதாகக் கூறி, போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரைப் பின்தொடர்பவர்கள் நடனமாடி, அந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
Next Story