தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொலை - துப்பாக்கி சூடு நடத்தியவரின் வீடியோ வெளியீடு
அமெரிக்காவில், தெலங்கானா இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சரத் கோப்பு. ஐதராபாத்தில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் என்ஜினியராக பணியாற்றி வந்த இவர், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு கான்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டே, அமெரிக்காவின் மிசவுரி பல்கலைகழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் அந்த உணவகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் சரத்தை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
Next Story