ராணி வீட்டு மருமகளால் வந்த புது ட்ரெண்ட்

பெரிய வீட்டு மருமகள் என்றால் சும்மாவா? இங்கிலாந்து அரச குடும்பத்து மருமகளான மீகன்தான். இப்போது உலக பெண்களுக்கெல்லாம் ரோல் மாடல்.
ராணி வீட்டு மருமகளால் வந்த புது ட்ரெண்ட்
x
முகத்தில் கரும்புள்ளி... இருந்தால்தான் பெரும்புள்ளி...

பொதுவாக பெண்கள் தங்கள் திருமணத்தின் போதுதான் அதிக பட்ச மேக்கப்புடன் ஆளே மாறி வருவார்கள். ஆனால், மீகன் திருமணத்தின் போது மிகக் குறைந்த மேக்கப் மட்டுமே பயன்படுத்தினார். இதனால் அவர் முகத்திலும் மூக்கின் மீதும் இருந்த கரும்புள்ளிகள் பளிச்சென தெரிந்தன. சே... என்ன ஒரு இயல்பு. என்ன ஒரு எளிமை என இதுவே டிரெண்டிங் ஆகிவிட்டது.

#freckleslikemeghan என்ற பெயரில் இதற்காக ஒரு ஹாஷ்டாகே உருவாக்கிவிட்டார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கரும்புள்ளிகளை மேக்கப் இல்லாமல் போட்டோ எடுத்து அதில் பதிவேற்றினார்கள். 

இன்னும் சில பெண்கள் அதுக்கும் மேலே போய்விட்டார்களாம்.
அது என்ன தெரியுமா? என் முகத்தில் கரும்புள்ளிகளே இல்லை. மீகன் மாதிரி கரும்புள்ளிகள் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என விசாரிக்கிறார்களாம். முகத்தில் சிறு சிறு புள்ளிகளை பச்சை குத்திக் கொள்வதற்காக டாட்டூ கலைஞர்களிடம் பல பெண்கள் குவிகிறார்களாம். 

கல்யாண அவசரத்துல மீகன் மேக்கப் போட மறந்திருப்பாங்க. அதுக்கு இவ்வளவு அக்கப்போரா என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் இந்த டாட்டூ டிரீட்மெண்ட்டுக்கு பணம் கட்டும் ஆண்கள். 

Next Story

மேலும் செய்திகள்