19 நிமிடங்கள்.. அடுத்தடுத்து - மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கங்கள் - 632 பேர் பலி

x

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 632ஆக அதிகரித்துள்ளது...

மாரகேஷ் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது... அடுத்த 19 நிமிடங்களில் மற்றுமொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆகப் பதிவானது... ஏராளமான கட்டங்கள், வீடுகள், மசூதிகள் இடிந்து சேதம் அடைந்தன... மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்... இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கையானது 632ஆக அதிகரித்துள்ளது... ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்