விளையாட்டு மைதானத்தில் நடந்த அசம்பாவிதம் 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

x

விளையாட்டு மைதானத்தில் நடந்த அசம்பாவிதம்

12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் மடகாஸ்கரில் நிகழ்ந்துள்ளது...

இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்காக கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்திற்குள்

நுழைய முயன்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கடந்த 2019ம் ஆண்டு மடகாஸ்கரில் உள்ள மற்றொரு மைதானமான மஹமசினா (Mahamasina) விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 15 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்