நண்பனைக் கடத்திய சக நண்பர்கள்? - ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

நண்பனைக் கடத்திய சக நண்பர்கள்? - ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
x

விழுப்புரத்தில் நண்பர்களால் இளைஞர் கடத்தப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

விழுப்புரம் சிங்கப்பூர் நகரை சேர்ந்தவர் சூரியகுமார்... இவரை, திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 2 பேர், டீ சாப்பிட அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்கள் சூரியகுமாரை வலுக்கட்டாயமாக, தென்பெண்ணை ஆற்றுக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

அங்கு, அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த நண்பர்கள், சூரியகுமாரை கடத்திவிட்டதாகவும், அவரை ஒப்படைக்க10 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, சூரியகுமாரின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அதனையறிந்த நண்பர்கள் சூரியகுமாரை விழுப்புரம் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டுச் சென்று உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

நண்பனைக் கடத்திய சக நண்பர்கள்? - ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

உண்மையிலேயே நண்பர்களால் சூரியகுமார் கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்